பதப்படுத்தப்பட்ட கல் கடாய் என்பது சாம்பார், ரசம், கோழி கறி, ஆடு கறி ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய சமையலறை பாத்திரமாகும். இந்த பாத்திரத்தை நாங்கள் உருவாகும்போது எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தவில்லை என்பதால் இது உங்கள் உணவை நச்சு இல்லாததாக ஆக்குகிறது. இதனை நாங்கள் பாரம்பரிய முறைப்படி சுமார் 10 நாட்கள் பதப்படுத்துவதால் இந்த பாத்திரத்தின் தன்மையானது மெருகேற்றப்படுகிறது. மேலும் கூடுதலாக நீங்கள் இதை பதப்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது. அமைப்பு: இந்த பாத்திரத்தின் திறன் 1.5 லிட்டர் ஆகும், இது ஒரு தடிமனான வட்டமான சுவரைக் கொண்டுள்ளது. உற்பத்தி நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள திறமைவாய்ந்த சிற்பிகளால் எங்கள் கல் கடாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பை வடிவமைக்க எந்த தானியங்கி இயந்திரமும் பயன்படுத்தப்படவில்லை, எனவே தயாரிப்பின் பரிமாணம் மாறுபடலாம் ஆனால் குறிப்பிடப்பட்ட அளவை உறுதிப்படுத்துகிறது. பயன்பாட்டு முறையின் அடிப்படையில் இது சாம்பல் நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறும்.
சுகாதார நன்மைகள்:
1. வேதியியல் கூறுகளற்ற இந்த பாத்திரமானது உணவின் ஊட்டச்சத்துகளை தக்கவைக்கக்கிறது.
2. இது நச்சு இல்லாத சமையல் பாத்திரம் என்பதால் கல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவு மிகச்சிறந்த சுவையை தருகிறது.
3. நான் ஏற்கனவே கூறியது போல இந்த கடாய் எந்த வேதிப்பொருள் பூச்சினையும் பெறவில்லை என்பதால் மூலப்பொருட்களின் அசல் நறுமணத்தை நம்மால் உணர முடியும்.
4. சமைக்கும் போது பாத்திரத்தில் வெப்பம் சீராக பரப்பப்படுகிறது. இது உணவின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை தக்கவைக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான உணவை உருவாக்க வழிவகுக்கிறது.
5. இந்த பாத்திரம் 4-5 மணி நேரம் வரை உணவை வெப்பமாக வைத்திருப்பதால் குளிர்விப்பனை பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை.
6. இந்த பதப்படுத்தப்பட்ட கல் கடாயில் நீங்கள் சாம்பார் முதல் பாலாக் வரை அனைத்தையும் சமைக்கலாம்.
7. இது சமைத்த உணவுக்கு கூடுதலாக இயற்கை தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.









Reviews
There are no reviews yet.